சாத்தூர்: தேர்தல் என்பது திமுகவை வீழ்த்துவதற்கான ஜனநாயக போர். திமுக என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறினார்.
அமமுக விருதுநகர் மத்திய மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.