திமுக இளைஞரணி சார்பில் திண்ணை பிரசாரம்

4 months ago 15

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருத்தணி கிரண் ஏற்பாட்டில், திருத்தணியில் உள்ள 5வது வார்டு பகுதியில் நேற்று திண்ணை பிரசார கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் வினோத்குமார் வரவேற்றார். இதில், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கி, துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வீடுவீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி அரசின் சாதனைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நகர துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதியும், நகரமன்ற உறுப்பினருமான அசோக்குமார், வட்டச் செயலாளர் ரவி, நகர இளைஞரணி அமைப்பாளர் சதிஷ், மீசை வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திமுக இளைஞரணி சார்பில் திண்ணை பிரசாரம் appeared first on Dinakaran.

Read Entire Article