திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்: தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக விஜய் கண்டனம்

1 day ago 5

சென்னை: சென்னை, முல்லை நகர் பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய தவெக நிர்வாகிகள் போலீஸாரால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக விஜய், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெகவினர் நிவாரணப் பொருட்களை வழங்கினர். போலீஸார் இதைத் தடுத்ததோடு, அத்துமீறி செயல்பட்டுள்ளனர். அதைக்கண்டு தவெக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதி(45), மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன்? என போலீஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read Entire Article