திமுக ஆட்சியில் 309 வேலைவாய்ப்பு முகாமில் 2,49,392 பேர் பணிநியமனம்: அமைச்சர் சி.வெ.கணேசன்

5 hours ago 3

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ராமநாதபுரம் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் (திமுக) பேசுகையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் நலன் கருதி மீண்டும் ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?” என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், “திமுக அரசு பொறுப்பேற்ற பின் இன்று வரை 309 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 392 பேருக்கு இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்களை அழைத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.

The post திமுக ஆட்சியில் 309 வேலைவாய்ப்பு முகாமில் 2,49,392 பேர் பணிநியமனம்: அமைச்சர் சி.வெ.கணேசன் appeared first on Dinakaran.

Read Entire Article