திமுக அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

11 hours ago 3

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து முதலமைச்சர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர்,

மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் – நகராட்சிகள் – மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!

6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்!

உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன!” என தெரிவித்துள்ளார்.

The post திமுக அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! appeared first on Dinakaran.

Read Entire Article