திமுக அரசு 3 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: அண்ணாமலை, டிடிவி தினகரன் வலியுறுத்தல்

3 months ago 17

சென்னை: பல கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளனர்.

அண்ணாமலை: ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெற்று அறிவிப்புகள் மூலம் மக்களை ஏமாற்றுவதையே முழுநேர பணியாக செய்து வருகிறது திமுக. கடந்த 2023 ஏப்ரல் மாதம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டை சேர்ந்த காலணி நிறுவனம் ரூ.2,302 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக திமுக அரசு அறிவித்தது. அதன் மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தது. ஆனால், 20 மாதங்கள் கடந்தும் கூட அந்த தொழிற்சாலை கட்டுமானத்துக்காக ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை.

Read Entire Article