தினமும் மாலையில் படியுங்கள் மக்கள் குறைதீர் கூட்டம்: 215 மனுக்கள் பெறப்பட்டது

3 hours ago 3

பெரம்பலூர்,மே13:பெரம்பலூரில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : மனுக்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடவும் அலுவலர்களுக்கு மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தல். 215 மனுக்கள் பெறப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் 12ம் தேதி திங்கட்கிழமை காலை, பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத் திறனாளிகள் மனு அளிக்கக் காத்திருந்த இடத்திற்கே சென்று அவர்களது கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மாவட்டக் கலெக்டர், மனுக்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத் திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடு மாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 215 மனுக்கள் பெறப்பட்டது. இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் சொர்ண ராஜ், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட தாட்கோ மேலாளர் கவியரசு, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாரதிவளவன், தாசில்தார்கள் பெரம்பலூர் பாலசுப்பிரமணியன், ஆலத்தூர் முத்துக்குமரன், வேப்பந்தட்டை துரைராஜ், குன்னம் சின்னதுரை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

The post தினமும் மாலையில் படியுங்கள் மக்கள் குறைதீர் கூட்டம்: 215 மனுக்கள் பெறப்பட்டது appeared first on Dinakaran.

Read Entire Article