திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்

2 months ago 12

திண்டுக்கல், டிச. 18: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். தாளாளர் மரியநாதன், முன்னாள் சங்க தலைவர் வீரமணி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் சங்க துணை தலைவர் நாட்டாமை காஜா மைதீன் 82 மாணவர்களுக்கு புத்தாடைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொறியாளர் பெஞ்சமின் ஆரோக்கியம், ஆசிரியர்கள் மைக்கேல், ஜெயசீலன், மரிய ராஜேந்திரன், லாரன்ஸ், செபாஸ்டின், சுவிக்கின் உள்பட பலர் கலந்து கொண்டனர்

The post திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article