திண்டுக்கல்லில் கனமழை கொட்டி தீர்த்தது

3 months ago 21

 

திண்டுக்கல், அக். 9: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 3.15 மணி அளவில் திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குள்ளனம்பட்டி, நாகல் நகர், ஆர்.எஸ்.ரோடு, தாடிக்கொம்பு ரோடு, நேருஜி ரவுண்டானா, பஸ் ஸ்டாண்ட், திருவள்ளுவர் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் ரோட்டில் தேங்கி நின்றதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகனஓட்டிகள் ஊர்ந்தபடி சென்றனர். மேலும் மாலை நேரம் என்பதால் பள்ளி விட்டு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

 

The post திண்டுக்கல்லில் கனமழை கொட்டி தீர்த்தது appeared first on Dinakaran.

Read Entire Article