திண்டுக்கல், ஜூன் 7: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிலைய மேலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.பேரணியில் கல்லூரி தேசிய மாணவர் படையினர் கலந்து கொண்டு இயற்கை வளத்தை பாதுகாப்போம், மரங்களை பாதுகாப்போம், பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
The post திண்டுக்கல்லில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.