திண்டுக்கல் அருகே வாலிபர் தற்கொலை

2 weeks ago 1

 

திண்டுக்கல், ஜன. 22: திண்டுக்கல் அருகேயுள்ள முள்ளிப்பாடி ஆரோக்யசாமி நகரை சேர்ந்தவர் பவுல்ராஜ் (வ26). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த பவுல்ராஜ் உறவினர்களிடம் எனக்கு வாழ பிடிக்கலை என கூறி வந்தார். இதையடுத்து உறவினர்கள் பவுல்ராஜை சமாதானம் செய்து அறிவுரை கூறினர்.

இந்நிலையில் பவுல்ராஜ் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பவுல்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ பாலசுப்பிரமணியன், ஏட்டு நல்லுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article