திண்டுக்கல் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது

1 day ago 3

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குட்டத்துப்பட்டி வெயிலடிச்சான்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (50). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன், செல்வராஜ் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தகராறு முற்றிய நிலையில் மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வராஜை வெட்டினார். இதில் படுகாயமடைந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ கிருஷ்ணவேணி, சிறப்பு எஸ்ஐ வனராஜன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

The post திண்டுக்கல் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article