திண்டுக்கலில் புகை பிடித்த போது வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு

8 months ago 41
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பெரிய ராவுத்தர் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது, பட்டாசுகள் வெடித்து உயிரிழந்தார். கடையில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்த அவர், சாப்பிட்டுவிட்டு புகைப்பிடித்ததாகவும், அப்போது நெருப்புப் பொறி பறந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகிறது. பலத்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, புகை மூட்டத்துக்கு இடையே அவர் இறந்து கிடந்தார். தீயணைப்புத் துறையினர் வந்து அவரது உடலை அப்புறப்படுத்தினர்.
Read Entire Article