திங்கள்சந்தை, ஜன. 9: கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், டிஎஸ்பி சந்திரசேகர் மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தனக்குமார், சப். இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரதாணு, சுரேஷ்குமார் மற்றும் போலீசார் திங்கள்நகர் ரவுண்டானா அருகில் நேற்றுமுன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக தாறுமாறாக வந்த தனியார் கல்லூரி பஸ்சை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய டிரைவர் மது போதையில் பஸ்சை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதேபோன்று மது போதையில் பைக் ஓட்டி வந்த 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதையடுத்து மது அருந்தி வாகனம் ஓட்டுதல் பிரிவில் 3 பேர் மீதும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அதிவேகமாக வந்தவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், மூன்று பேராக வந்தவர்களுக்கும் அபராதம் விதித்தனர்.
The post திங்கள்சந்தையில் மது போதையில் கல்லூரி பஸ் ஓட்டிய டிரைவர் போலீசாரிடம் சிக்கினார் appeared first on Dinakaran.