*சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்து
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள டெய்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனால் பூங்காக்களில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது.
கோடை சீசனுக்காக தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் பூங்காவில் டெய்சி மலர்கள் மட்டும் பல்வேற பகுதிகளிலும் பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து சொல்கின்றனர்.
கடந்த இரு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பூங்காவில் பசுமை திரும்ப வாய்ப்புள்ளது. மேலும் அனைத்து மலர் செடிகளும் துளிர்க்க வாய்ப்பு உள்ளது.
The post தாவரவியல் பூங்காவில் டெய்சி மலர்கள் appeared first on Dinakaran.