கடத்தூர், பிப்.13: கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி, நொச்சிக்குட்டை அருகே கைக்கெட்டும் தூரத்தில், உயர் அழுத்த மின்கம்பி தாழ்வாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தாளநத்தம் பகுதியில் கிணற்றுக்கு உயர் அழுத்த மின் கம்பி, தாழ்வாக கைக்கு எட்டும் வகையில், செல்கிறது. இந்த மின் கம்பிகள் மூலம் கால்நடை மற்றும் மக்கள் ஆபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. லேசான காற்று அடித்தாலே, மின்கம்பி கீழே விழுந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உயிர்பலி ஏற்படும் முன்பு, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அபாயம் appeared first on Dinakaran.