தாய்லாந்தில் பள்ளி பஸ்சில் தீ; 25 மாணவர்கள் பலி

2 hours ago 2

பாங்காங்: தாய்லாந்தின் சென்ட்ரல் உதாய் தானி மாகாணத்தில் இருந்து சுற்றுலா செல்வதற்காக மாணவர்கள் பள்ளிப்பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 44 பேர் பேருந்தில் பயணம் செய்தனர். அயுத்தாயா மற்றும் நோந்தபுரி மாகாணங்களுக்கு சுற்றுலா செல்ல இருந்தநிலையில் பதும் தானி அருகே பிற்பகல் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அதன் ஒரு சக்கரம் வெடித்துள்ளது.

இதில் பேருந்து தீப்பிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். சுமார் 25 மாணவர்கள் உயிரிழந்து இருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

The post தாய்லாந்தில் பள்ளி பஸ்சில் தீ; 25 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Read Entire Article