தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.29.66 கோடியில் நவீன வசதிகளுடன் அரசு பள்ளிகளில் புனரமைப்பு பணிகள்

15 hours ago 4

* மாணவ, மாணவிகளை கவரும் அழகு ஓவியங்கள் குடிநீர் சுத்திகரிப்பான்கள், தனித்தனி கழிவறைகள்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் அரசு பள்ளிகள், ரூ.29.66 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 40க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளுக்கு குடிநீர், கழிவறை, சுற்றுச்சுவர், கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்புகள் போன்ற அத்தியாவசிய பணிகள் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திட்ட பணிகள்: பள்ளி மேம்பாட்டு மானியம் உட்கட்டமைப்பு திட்டம் 2022 -23ல், கூடுதல் கட்டிடம், 4 பணிகள், ரூ.2.80 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பள்ளி மேம்பாட்டு மானியம் உட்கட்டமைப்பு திட்டம் 2024 -25ல், கூடுதல் கட்டிடம், 14 பணிகள், ரூ.9 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

பள்ளி மேம்பாட்டு மானியம் இயக்குதல் மற்றும் பராமரிப்பு திட்டம் 2024 -25ல், பராமரிப்பு பணிகள், 4 பணிகள், ரூ.53 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.மாநகராட்சி கல்வி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள்: 1வது மண்டலத்தில், கூடுதல் கட்டிடம், கழிவறை புனரமைப்பு, 7 பள்ளிகளில் 18 பணிகள் ரூ.4 கோடியே 41 லட்சத்து, 40 ஆயிரம் மதிப்பீட்டில் 7 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.

2வது மண்டலத்தில் கூடுதல் கட்டிடம், சுற்றுச்சுவர், கழிவறை பேவர் பிளாக் அமைத்தல், சிசிடிவி, பிஏ சிஸ்டம், யுபிவிசி, 4 பள்ளிகளில், 11 பணிகள், ரூ.6 கோடிய 60 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. 3வது மண்டலத்தில் கூடுதல் கட்டிடம், கழிவறைகள், பராமரிப்பு பணிகள், 4 பள்ளிகளில் 8 பணிகள், ரூ.2 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

4வது மண்டலத்தில் கூடுதல் கட்டிடம், கழிவறைகள், சுற்றுச்சுவர் பராமரிப்பு பணிகள், 6 பள்ளிகளில், 14 பணிகள், ரூ.4 கோடியே 25 லட்சத்தில், 4 பணிகள் முடிக்கப்பட்டு, 10 பணிகள் நடைபெற்று வருகிறது. 5வது மண்டலத்தில் கூடுதல் கட்டிடம், கழிவறைகள், சுற்றுச்சுவர் பராமரிப்பு பணிகள், 3 பள்ளிகளில், 4 பணிகள், ரூ.1 கோடியே, 6 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 2 பணிகள் முடிக்கப்பட்டு 2 பணிகள் நடைபெற்று வருகிறது.

1வது மண்டலத்துக்கு உட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ஏற்கனவே கட்டிடங்களை புனரமைத்து கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல், வகுப்பறைகள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.

இதில், பம்மல், நடராஜன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், ரூ.41.40 லட்சத்தில், ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் பழுதுகள் நீக்கம் செய்து புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு வண்ணம் பூசுதல், மின் விளக்கு, தரை தளம் சரிசெய்தல், ஓவியம் வரைதல், சுத்திகரிப்பு நிலையம் மற்றும் இதர பழுது நீக்கம் மேற்கொள்ளும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.ரூ.1.20 கோடியில், பள்ளிகளில் வகுப்பறை கட்டுதல் மற்றும் கழிவறை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

பம்மல், பசும்பொன் நகர் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரூ.13 லட்சத்தில், ஏற்கனவே உள்ள கட்டிடத்தை புனரமைத்து வண்ணம் பூசுதல், மின் விளக்கு, தரை தளம் சரிசெய்தல், ஓவியம் வரைதல், சுத்திகரிப்பு நிலையம் மற்றும் இதர பழுது நீக்கம் மேற்கொள்ளும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.60 லட்சத்தில், பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை காரணமாக வகுப்பறை கட்டுதல் மற்றும் புதியதாக கழிவறை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

அனகாபுத்தூர், மன்னார்சாமி தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், ரூ.35 லட்சத்தில், ஏற்கனவே உள்ள கட்டிடத்தை புனரமைத்து வண்ணம் பூசுதல், மின் விளக்கு, மின்வசதி ஏற்படுத்துல், தரை தளம் சரிசெய்தல், ஓவியம் வரைதல் மற்றும் இதர பழுது நீக்கம் மேற்கொள்ளும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.90 லட்சத்தில், பள்ளிகளில் வகுப்பறை மற்றும் புதியதாக கழிவறை கட்டுதல் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

திருநீர்மலை, பாடசாலை தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரூ.21 லட்சத்தில், ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் பழுதுகள் நீக்கம் செய்து வண்ணம் பூசுதல், மின் விளக்கு, தரை தளம் சரிசெய்தல், ஓவியம் வரைதல் மற்றும் இதர பழுது நீக்கம் மேற்கொள்ளும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.67.50 லட்சத்தில், பள்ளிகளில் வகுப்பறை மற்றும் புதியதாக கழிவறை கட்டுதல் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

திருநீர்மலை பிரதான தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், ரூ.23 லட்சத்தில், ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் பழுதுகள் நீக்கம் செய்து புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு வண்ணம் பூசுதல், மின் விளக்கு, மின்வசதி ஏற்படுத்துல், தரை தளம் சரிசெய்தல், ஓவியம் வரைதல் மற்றும் இதர பழுது நீக்கம் மேற்கொள்ளும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.29.50 லட்சத்தில், பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை காரணமாக புதியதாக கழிவறை கட்டுதல் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

திருநீர்மலை கிழக்கு மாடதெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், ரூ.11.50 லட்சத்தில், ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் பழுதுகள் நீக்கம் செய்து புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு வண்ணம் பூசுதல், மின் விளக்கு, மின்வசதி ஏற்படுத்துல், தரை தளம் சரிசெய்தல், ஓவியம் வரைதல் மற்றும் இதர பழுது நீக்கம் மேற்கொள்ளும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

ரூ.1 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், பள்ளிகளில் வகுப்பறை மற்றும் புதியதாக கழிவறை கட்டுதல் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 17வது வார்டு, பொன்னியம்மன் தொடக்கப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை என மொத்தம் 18 வகுப்பறைகள் உள்ளது. இதில் 251 மாணவர்கள், 262 மாணவிகள் என மொத்த 513 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பள்ளியில் மாணவர்களுக்கு 2 கழிவறைகள், மாணவிகளுக்கு 2 கழிவறைகள், ஆசிரியர்களுக்கு 1 கழிவறை உள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 7 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2024-25ம் நிதியாண்டில், 17வது வார்டு, ஜமீன் பல்லாவரம் தொடக்கப்பள்ளிக்கு ரூ.60 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகள்.

ரூ.60 லட்சத்தில், கழிவறை, முகப்பு பகுதியில் வளைவு மற்றும் மேல் தளத்தில் மேற்கூரை அமைத்தல் பணி, ஜமீன் பல்லாவரம், மாநகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு ரூ.60 லட்சத்தில், கூடுதல் கட்டிடம் கட்டுதல் பணி, பொன்னியம்மன் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில், கழிவறை கட்டுதல் பணிகளுக்கு கல்விநிதியின் கீழ் நிர்வாக அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைப்பெற்று, முடியும் தருவாயில் உள்ளது.

மேற்படி கட்டிட பணியானது ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.13வது வார்டு, ஈசா பல்லாவரம் தொடக்கப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை என மொத்தம் 12 வகுப்பறைகள் உள்ளது. இதில் 124 மாணவர்கள், 99 மாணவிகள் என மொத்தம் 223 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பள்ளியில் மாணவர்களுக்கு 10 கழிவறைகள், மாணவிகளுக்கு 10 கழிவறைகள், ஆசிரியர்களுக்கு 2 கழிவறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிவறைகள் உள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 2 ஸ்மார்ட் வகுப்பறைகள் பள்ளிக்கல்வி துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் சுத்திகரிப்பான்கள் அமைக்கப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகிறது.மேலும் 2024-25ம் நிதியாண்டில், 13வது வார்டு, ஈசா பல்லாவரம் தொடக்கப்பள்ளிக்கு ரூ.60 லட்சத்தில், கூடுதல் கட்டிடம் கட்டும் பணி.

ரூ.60 லட்சத்தில், சுற்று சுவர், கழிவறை, பேவர் பிளாக் அமைத்தல், சிசிடிவி, பிஏ சிஸ்டம், யுபிவிசி மற்றும் கதவு, ஜன்னல் மாற்றி அமைத்தல் பணி. ரூ.60 லட்சத்தில், கூடுதல் கட்டிடம் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல் பணிகளுக்கு கல்விநிதியின் கீழ் நிர்வாக அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைப்பெற்று, முடியும் தருவாயில் உள்ளது. மேற்படி கட்டிட பணியானது ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி, 17வது வார்டு, பொன்னியம்மன் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை என மொத்தம் 33 வகுப்பறைகள் உள்ளது. இதில் 722 மாணவர்கள், 685 மாணவிகள் என மொத்தம் 1407 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.பள்ளியில் மாணவர்களுக்கு 13 கழிவறைகள், மாணவிகளுக்கு 6 கழிவறைகள், ஆசிரியர்களுக்கு 9 கழிவறைகள் உள்ளது.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 4 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பான்கள் அமைக்கப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகிறது. மேலும் 2024-25ம் நிதியாண்டில், 17வது வார்டு, ஜமீன் பல்லாவரம், உயர்நிலை பள்ளிக்கு ரூ.60 லட்சத்தில், கூடுதல் கட்டிடம் கட்டும் பணி.

ரூ.60 லட்சத்தில், சென்ட்ரலைஸ்ட் ஸ்பீக்கர் சிஸ்டம், ஓஎச்பி ஒலிபெருக்கி வசதி, சுற்றுச் சுவர் உயர்த்தி அமைத்தல், கடப்பா கற்களினால் ஆன மேசைகள் மற்றும் இருக்கை அமைத்தல், பேவர் பிளாக் அமைத்தல், ஆர்ஓ குடிநீர் அமைத்தல், யூபிவிசி கதவு, ஜன்னல் பொருத்துதல், கணினி வாங்கி பொருத்துதல், நுழைவாயில் வளைவு அமைத்தல், மேஜை, நாற்காலி மற்றும் அலமாறி வாங்கி பொருத்துதல் பணி.

ஜமீன் பல்லாவரம், மாநகராட்சி மேல் நிலைப் பள்ளிக்கு ரூ.60 லட்சத்தில், கழிவறை, சமையலறை, மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளுதல் பணி. பொன்னியம்மன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில், கழிவறை கட்டுதல் பணி. பொன்னியம்மன் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில், கழிவறை கட்டுதல் பணி. ஜமீன் பல்லாவரம் மேல்நிலைப் பள்ளியில் ரூ.68 லட்சத்தில், கூடுதல் வகுப்பறை கட்டுதல் பணி.

ஜமீன் பல்லாவரம் தொடக்கப்பள்ளியில் ரூ.68 லட்சத்தில், கூடுதல் வகுப்பறை கட்டுதல் பணிகளுக்கு கல்விநிதியின் கீழ் நிர்வாக அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று, முடியும் தருவாயில் உள்ளது. மேற்படி கட்டிட பணியானது ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி, 20வது வார்டு, கீழ்க்கட்டளை நடுநிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை என மொத்தம் 16 வகுப்பறைகள் உள்ளது. இதில் 188 மாணவர்கள், 184 மாணவிகள் என மொத்தம் 372 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு 3 கழிவறைகள், மாணவிகளுக்கு 3 கழிவறைகள், ஆசிரியர்களுக்கு 1 கழிவறை உள்ளது. மேலும் குடிநீர் சுத்திகரிப்பான்கள் அமைக்கப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகிறது.

2024-25ம் நிதியாண்டில், 20வது வார்டு, கீழ்கட்டளை நடுநிலைப் பள்ளிக்கு ரூ.60 லட்சத்தில், கழிவறை, நுழைவாயில் வளைவு, சென்ட்ரலைஸ்ட் ஸ்பீக்கர் சிஸ்டம், ஓஎச்பி ஒலிபெருக்கி வசதி, சிசிடிவி, பிஏ சிஸ்டம், யூபிவிசி மற்றும் கதவு, ஜன்னல் மாற்றி அமைத்தல் பணி. ரூ.60 லட்சத்தில் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணி.

ரூ.68 லட்சத்தில், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல் பணி. ரூ.15 லட்சத்தில் கழிவறை கட்டுதல் பணிகளுக்கு கல்விநிதியின் கீழ் நிர்வாக அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைப்பெற்று, முடியும் தருவாயில் உள்ளது. மேற்படி கட்டிட பணியானது ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 75 % பணிகள் நிறைவு தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலத்துக்குட்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் 2024-25ம் நிதியாண்டு முதல் நடைபெற்று வரும் பணிகள்:

* 23வது வார்டு, ஜமீன் ராயபேட்டை மேல்நிலைப்பள்ளியில் ரூ.60 லட்சத்தில், 4 வகுப்பறைகள், 80 சதவீத பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.7 லட்சத்தில், 6 கழிபிட வசதி பணிகள் முடிவடைந்துள்ளது. ரூ.35.25 லட்சத்தில் மேல்நிலைப்பள்ளியின், 2ம் தளத்தில், 2 கூடுதலாக வகுப்பறைகள் 50 சதவீத பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ.22 லட்சத்தில், மேல்நிலைப்பள்ளியின் பழைய கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் பணி, 65 சதவீத பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.42 லட்சத்தில், மேல்நிலைப்பள்ளியின் அறிவியல் ஆய்வு கூடத்திற்கு ஒப்பந்தபுள்ளி பெறப்படவுள்ளது. 38வது வார்டு, ஜமீன் ராயபேட்டை, தொடக்கப் பள்ளியில் ரூ.35 லட்சத்தில், வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசும்பணி, 65 சதவீத பணிகள் நடைபெற்றுவருகிறது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 22வது வார்டு, அஸ்தினாபுரம் தொடக்கப்பள்ளியில் ரூ.50 லட்சத்தில், கழிப்பறை மற்றும் வர்ணம் பூசுதல் பணி, 55 சதவீத பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.20 லட்சத்தில், பள்ளியின் 2ம் தளத்தில் 4, வகுப்பறைகள் 80 சதவீத பணிகள் நடைபெற்று வருகிறது.

* 22வது வார்டு, அஸ்தினாபுரம் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.35 லட்சத்தில், 2ம் தளத்தில் வகுப்பறை பணிகள் முடிவுற்றது. ரூ.50 லட்சத்தில், மேல்நிலைப்பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறை பணிகள் முடிவுற்றது.

* ராமகிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளியில் ரூ.18 லட்சத்தில் 6 புதிய கழிப்பறை 6 பணி, 75 சதவீத பணிகள் நடைபெற்று வருகிறது.

* 44வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் நடுநிலைப்பள்ளியில் ரூ.68 லட்சத்தில், 4 புதிய வகுப்பறைகள் பணி 75 சதவீத பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.29.66 கோடியில் நவீன வசதிகளுடன் அரசு பள்ளிகளில் புனரமைப்பு பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article