தாம்பரம் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

6 months ago 21

தாம்பரம்: தாம்பரம் மின் கோட்டத்திற்கு நாளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு தாம்பரம், முல்லை நகரில் உள்ள புதுதாங்கல் துணை மின்நிலைய வளாகத்தில் செயற்பொறியாளர் தலைமையில், நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, தீர்வு காணலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாம்பரம் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article