தாம்பரம் அருகே 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

3 months ago 15

தாம்பரம், அக்.29: குரோம்பேட்டை, ராஜேந்திர பிரசாத் சாலையில் என்.எஸ்.என் மெட்ரிக்குலேஷன் என்ற பள்ளியும், சிட்லபாக்கம் பகுதியில் ரோஸ்லி மெட்ரிக்குலேஷன் என்ற பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த 2 பள்ளிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த 2 பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மர்ம மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த 2 பள்ளிகளின் நிர்வாகத்தினரும் சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் 5 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் 2 பள்ளிகளுக்கும் நேரில் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் சோதனைக்குப் பின்னர் எந்த ஒரு வெடிகுண்டும் கிடைக்காததால் மின்னஞ்சல் மூலம் வந்த தகவல் புரளி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாம்பரம் அருகே 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article