தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் குண்டும், குழியுமாக உள்ள சாலையால் நோயாளிகள் அவதி

1 week ago 3

​தாம்​பரம் சானடோரி​யம், அரசு நெஞ்சக நோய் மருத்​து​வ​மனை​யில், வார்​டு​களுக்கு செல்​லும் உட்​புற சாலைகள் குண்​டும், குழி​யு​மாக மோச​மான நிலைக்கு மாறி​யுள்​ளன. உள்​நோ​யாளி​கள் நடந்து செல்​லக்​கூட முடி​யாமல் கடும் அவதி​யடைகின்​றனர். தாம்​பரம் சானடோரி​யத்​தில், 1928-ம் ஆண்டு நிறு​வப்​பட்ட அரசு நெஞ்சக நோய் மருத்​து​வ​மனை, நுரை​யீரல் நோய்​களுக்கு சிகிச்சை அளிப்​ப​தற்​கும், பொது சுகா​தா​ரத்தை மேம்​படுத்​து​வதற்​கும், குறிப்​பாக காசநோய் (TB) மற்​றும் எச்​.ஐ.வி / எய்ட்ஸ் நோய்​களுக்கு சிகிச்​சையளிப்​ப​தற்​கும் ஒரு முன்​னோடி​யாக திகழ்​கிறது. மொத்​தம், 800-க்​கும் மேற்​பட்ட படுக்கைகளு​டன் நோயாளி​களுக்​கு, தொற்று மற்​றும் தொற்று அல்​லாத நுரை​யீரல் நோய்​களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்​ப​தில் இம்​மருத்​து​வ​மனை முக்​கிய பங்கு வகிக்​கிறது.

இங்கு காசநோய், எச்​.ஐ.வி / எய்ட்​ஸ், நாள்​பட்ட நுரை​யீரல் அடைப்பு நோய் (COPD), ஆஸ்​து​மா, ஒவ்​வாமை மூச்​சுக்​குழாய் அழற்​சி, மூச்​சுக்​குழாய் தளர்ச்​சி, நுரை​யீரல் அழற்​சி, திசு இடை​நார் நுரை​யீரல் நோய்​கள் (Interstitial lung Diseases), நுரை​யீரல் புற்​று​நோய் (Lung Malignancies) மற்​றும் பல்​வேறு வகை​யான சுவாசக் கோளாறுகளுக்கு மருத்​துவ சிகிச்​சைகள் அளிக்​கப்​படு​கிறது. எச்​.ஐ.வி மற்​றும் காசநோய் சிகிச்​சைக்​கான சிறந்த மைய​மாக அங்​கீகரிக்​கப்​பட்​டுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்​து​வ​மனை, தீவிர சிகிச்சை அளிப்​ப​தில் முக்​கிய பங்கு வகிக்​கிறது. தெற்கு ஆசி​யா​விலேயே மிகப்​பெரிய மருத்​து​வ​மனை என கருதப்​படும் இங்​கு, தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​கள், வெளி மாநிலங்​களில் இருந்​து நோயாளி​கள் சிகிச்​சைக்கு வரு​கின்​றனர்.

Read Entire Article