தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

4 months ago 14

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக இன்று தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மானாமதுரைக்கு செல்லும் சிறப்பு ரயில் மாலை 5 மணிக்கு புறப்படும். விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை வழியாக காலை 3.45க்கு மானாமதுரை சென்றடைகிறது.

அதே ரயில் மறுமார்க்கத்தில் அக்.31ம் தேதி காலை 11.45க்கு புறப்பட்டு இரவு 11.10க்கு தாம்பரம் வந்தடைகிறது. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மதுரை, நெல்லை வழியாக காலை 4.40க்கு நாகர்கோவில் சென்றடைகிறது. அதே ரயில் மறுமார்க்கத்தில் அக்.31ம் தேதி காலை 8.45க்கு புறப்பட்டு இரவு 9.55க்கு தாம்பரம் வந்தடைகிறது. இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.

The post தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Read Entire Article