சென்னை: தாது மணல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் தமிழகத்தில் 12 இடங்களில் சோதனை நடத்திய நிலையில், வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விதிகளுக்குப் புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான தமிழக அரசின் சிறப்பு குழுவினர் தாது மணல் குவாரிகளில் சோதனை நடத்தி, பெருமளவு முறைகேடு நடந்திருப்பதையும், அரசுக்கு ரூ.5,832.29 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர்.