தமிழீழ இனப்படுகொலைக்கு மே 18ல் நினைவு அஞ்சலி: வைகோ அழைப்பு

3 weeks ago 10

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
2009ம் ஆண்டில் இலங்கை தீவில் சிங்கள பேரினவாத அரசு உலக வல்லரசு நாடுகளிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்களை வாங்கிக் கொண்டு முப்படைகளையும் ஏவி கோரமான தமிழீழ இனப்படுகொலை நடத்தியது. அதில் தமிழர்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைக்கும்போதே நமது நெஞ்சம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.

மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆண்டுதோறும் சென்னை கடற்கரையில் ஆயிரக்கணக்கில் தமிழர்களை திரட்டி, மடிந்த ஈழத்தமிழர்களுக்காக நினைவஞ்சலி சுடர் ஏற்றும் கடமையைச் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மதிமுகவும் கரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலியைச் செய்து வருகிறது. இந்த ஆண்டும் வரும் 18ம் தேதி பெசன்ட் நகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி சுடர்களை ஏந்தி புகழ் வணக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

தமிழ் உணர்வாளர்களும், ஈழத் தமிழ் பற்றாளர்களும், மதிமுகவினரும் 18ம் தேதி மாலை 4 மணிக்கெல்லாம் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்து பெருமளவில் பங்கேற்க வேண்டும்.

The post தமிழீழ இனப்படுகொலைக்கு மே 18ல் நினைவு அஞ்சலி: வைகோ அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article