தவெக நிர்வாகிகள் இருவரின் உடலுக்கு புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி - உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

3 months ago 14

திருச்சி: தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்த அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரின் உடலுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திங்கள்கிழமை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, தவெக தலைவர் விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து அக்கட்சி தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கார், பஸ், வேன் மூலமாக சென்றனர். தவெக திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் உறையூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த கலை (என்ற) கலைகோவன் (40), இளைஞர் அணி தலைவர் பெரியசெட்டித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (34) உள்ளிட்டோரும் காரில் விக்ரவாண்டி நோக்கி சென்றனர்.

Read Entire Article