தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ விரைவில் பாஜகவில் சேர திட்டமா?

4 months ago 27

நாகர்கோவில்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைய திட்டமிட்டிருப்பதாக ஆதாரத்துடன் புகார்கள் சென்றதால், அதிமுக கட்சி தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவை வழிநடத்தும் முக்கிய பொறுப்புகளை கடந்த 20 ஆண்டுகளாகவே தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வகித்து வந்தார்.

சமீப காலமாக அவர், இந்து கோயில்கள், அமைப்புகள் மற்றும் இந்து சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வந்தார். குறிப்பாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தளவாய் சுந்தரத்தின் பெயர் முதன்மையாக இருக்கும். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடைபெறும் ஆரத்தி வழிபாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். விவேகானந்தா கேந்திராவுக்கு ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் வரும்போது, அவர்களை சந்தித்து பேசுவது வழக்கமாக இருந்துள்ளது.

Read Entire Article