தர்மபுரி மண்டலத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

3 weeks ago 6

 

 

தர்மபுரி, ஜன.12: தர்மபுரி மண்டலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முதல், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என்று அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (14ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழகம் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக நேற்று (11ம் தேதி) முதல் 16ம் தேதி வரை சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. தர்மபுரியில் இருந்து சென்னைக்கும், தர்மபுரியில் இருந்து பெங்களூருக்கும் சிறப்பு பஸ் அதிகம் இயக்கப்படுகிறது. மேலும் சேலத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது. இதுபோல் பாலக்கோடு, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி, ஓசூர், பகுதிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்மபுரி மண்டலத்தில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

The post தர்மபுரி மண்டலத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article