தருமபுரி: தருமபுரி அருகே வேதராம்பட்டியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு கிடங்கில் பணிபுரிந்த 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணி தீவிரம் அடைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே வேதராம்பட்டியில் பட்டாசு ஆலையில் செயல்பட்டு வருகிறது. இதில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வெடித்து விபத்தில் பட்டாசு கிடங்கில் பணிபுரிந்த 3 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
The post தருமபுரி அருகே வேதராம்பட்டியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.