தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள அலசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் முனிகிருஷ்ணன்(50), தனது நண்பர்களுடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சென்று விட்டு நேற்று (மார்ச் 4) இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவருடன், ஓசூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்(47), பசவராஜ்(38), மஞ்சுநாத்(47), சந்திரப்பா (50) ஆகியோரும் பயணித்தனர். அவர்களது கார், பாலக்கோடு அடுத்த ஜிட்டாண்டஅள்ளி பிரிவு சாலை அருகே சென்றபோது சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது.