பல ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? - உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

3 hours ago 2

சென்னை: பல ஆண்டுகளாக வாரிசு சான்றிதழ் பெறாதவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அளிக்கும் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அரசு என்பவர் தாக்கல் செய்த மனுவில், “எனது தந்தை சி.பி. சுப்பிரமணிக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் திருவல்லிக்கேணி கஜபதி தோட்டத்தில் நிலம் வழங்கப்பட்டது. எனது தந்தை கடந்த 1998-ம் ஆண்டு இறந்து விட்டார். எனது தாயாரும், 2 அண்ணன்களும் இறந்து விட்டனர். தற்போது நானும், எனது சகோதரிகளான சாந்தகுமாரி, மேனகா ஆகியோர் மட்டும் உள்ளோம். எங்களது தந்தை இறந்தவுடன், நாங்கள் வாரிசு சான்றிதழ் பெறவில்லை.

Read Entire Article