சென்னை: தரமான கல்வியால் நாம் நாட்டை வழி நடத்தி கொண்டிருக்கிறோம் என்று துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், தலைமை செயலாளர் நா.முருகானந்தம், உயர்கல்வித்துறை செயலர் சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.