டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 31 டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய நீரை திறக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி நீர் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
The post தமிழ்நாட்டுக்கு 31 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவு appeared first on Dinakaran.