தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு பிரேமலதா கண்டனம்

3 months ago 12

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், படகுகளுடன் சிறைபிடிப்பதும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

பலமுறை இந்திய அரசும், தமிழக அரசும் எச்சரிக்கை விடுத்தும் கைது நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் நடக்கவில்லை. இது தமிழக மீனவர்களிடையே மிகப் பெரிய ஒரு கொந்தளிப்பையும், மன வேதனையும் உருவாக்கி இருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கி அவர்களை உடனே விடுதலை செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

The post தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு பிரேமலதா கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article