தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும் : அமைச்சர் கோவி செழியன்

6 hours ago 3

சென்னை :தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டின் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், “விண்ணப்பக் கட்டணம் செலுத்திய 2.41 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள்
www.tneaonline.rog இணையதளத்தில் தரவரிசை எண்ணை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 40,645 பேர் கூடுதலாக விண்ணப்பம் அளித்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.

பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியலின்படி, கடலூர் மாணவி தரணி முதலிடம், சென்னை மாணவி மைதிலி 2ம் இடம் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெறும். சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கப்படும். பொறியியல் படிப்புக்காக துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும் : அமைச்சர் கோவி செழியன் appeared first on Dinakaran.

Read Entire Article