சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்றும் இணையும் பகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவை தவிர தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 13ம் தேதியில் தொடங்க உள்ளது.
இந்த நிகழ்வுகளின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த கா்ற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
இதையடுத்து, இன்று முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 13ம் தேதி முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும். இருப்பினும், 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரிக்கும்.
The post தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும் appeared first on Dinakaran.