சென்னை : தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரன் யார் யாரிடம் பேசினார் என்பது பற்றி தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறியிருந்தார் அண்ணாமலை. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
The post தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு appeared first on Dinakaran.