சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவேண்டும் தி.க. தலைவர் கி.வீரமணி
வலியுறுத்தியுள்ளார். “அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவி ஆளுநராக நீடிக்கக்கூடாது. தனக்கு இல்லாத வீட்டோ அதிகாரம் இருப்பதாக எண்ணி ஆளுநர் ரவி செயல்பட்டுவந்தார். மாநில உரிமைகளை பறிக்க ஆளுநர்களை கருவியாக பயன்படுத்தும் போக்குக்கு முற்றுப்புள்ளி” என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவேண்டும்: தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.