தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

4 hours ago 3

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசின் வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 4 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏற்கனவே அரசுப்பணியாற்றி ஓய்வுபெற்றவர்களையே மீண்டும் அரசுத்துறைகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் பத்துலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த அரசு பின்பு அதற்கு மாறாக அரசுத்துறைகளில் ஓய்வுபெற்றவர்களை நியமிப்பது, அரசுப்பணி கனவில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் அமையும். எனவே, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களை நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article