தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று சம்பா பயிர் காப்பீடு செய்ய அவகாசத்தை நவ.30 வரை நீட்டித்தது ஒன்றிய அரசு

2 months ago 13

டெல்லி: தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று சம்பா பயிர் காப்பீடு செய்ய அவகாசத்தை நவ.30 வரை ஒன்றிய அரசு நீட்டித்தது. சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவ.15-ல் முடிந்த நிலையில் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகள் கோரிக்கைக்கிணங்க விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவ.30 வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனவே, சனி, மற்றும் ஞாயிற்று கிழமையில் பொது சேவை மையங்கள்செயல்படுவதால் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 30ம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது. நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று சம்பா பயிர் காப்பீடு செய்ய அவகாசத்தை நவ.30 வரை நீட்டித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Read Entire Article