தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ‘டங்ஸ்டன் சுரங்கம்’ அமைக்கப்படாது: ஒன்றிய அமைச்சர் கூறியதாக திருமாவளவன் தகவல்

6 months ago 16

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து, மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் ‘டங்ஸ்டன் சுரங்கம்’ அமைப்பதை கைவிடக் கோரி வலியுறுத்தினேன்.

அதனை பெற்றுக்கொண்ட அவர், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய ஒன்றிய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என உறுதியளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பார்வைக்கு வந்ததாகவும் கூறினார். அத்துடன், தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருப்போம்; கவலை வேண்டாமென்றும் கூறினார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ‘டங்ஸ்டன் சுரங்கம்’ அமைக்கப்படாது: ஒன்றிய அமைச்சர் கூறியதாக திருமாவளவன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article