தமிழ் மொழியை தமிழர்கள் அனைவரும் பெருமையுடன் போற்றுவோம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பதிவு

17 hours ago 1

சென்னை: எணற்ற மொழிகளுக்கு ஆதி மொழியாய் நிற்கும் தமிழ் மொழியை தமிழர்கள் அனைவரும் பெருமையுடன் போற்றுவோம் என தாய்மொழி தினத்தையொட்டி ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து மக்களும், தங்களது தாய்மொழியை போற்றுகின்ற வண்ணம், இன்றைய தினமானது ‘உலக தாய்மொழி’ தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், பன்முக தன்மை கொண்ட நமது பாரத தேசத்தில் உள்ள அனைவரும், அவர்தம் தாய்மொழியை நேசிக்கின்ற மற்றும் எண்ணி பெருமை கொள்கின்ற தினமாக இன்றைய தினம் அமைந்திட வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், எண்ணற்ற மொழிகளுக்கு ஆதி மொழியாய் நின்று, பல்லாயிரம் ஆண்டுகளாய் செழித்து தமிழர்களின் மனதில் ஆழ வேரூன்றி நிற்கும் தமிழ் மொழியை, தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமையுடன் போற்றுவோம். தேசமயம், சிறுவயது முதலே தாய்மொழி வழிக்கல்வியில் நமது கற்றல் திறனை தொடங்குவது என்பது, ஒவ்வொரு மனிதரிடத்திலும் தனது மொழியின் பண்புகளான மனிதம் மற்றும் அனைத்து உயிர்களிடத்திலான நேசத்தை வலுப்படுத்துகிறது. அவ்வாறான பண்பை தேசம் முழுவதும் அனைவரும் வளர்த்து கொள்ள வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டு, தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்துகின்ற ‘புதிய கல்வி கொள்கையை’ ஏற்படுத்தி கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

The post தமிழ் மொழியை தமிழர்கள் அனைவரும் பெருமையுடன் போற்றுவோம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article