தமிழ் பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழி தமிழ் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பு

6 months ago 20

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மா.செல்வராசனுக்கு மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கு, இந்தாண்டு சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மா.செல்வராசன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுடன், ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ், கருணாநிதி சிலையை வழங்கினார்.

Read Entire Article