தஞ்சாவூர்: “தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ராஜராஜசோழன் பெயரை சூட்ட வேண்டும்.” என ராஜராஜ சோழனின் சதய விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது ஆண்டு சதய விழா இன்று (நவ.9) காலை தஞ்சை பெரிய கோயிலில் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.