
சென்னை,
தமிழக அரசு சார்பில் வெளிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்றும் அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.