மதுரை: தமிழகம் முழுவதும் பாஜக மாவட்டத் தலைவர் தேர்தல் தொடங்கியுள்ளது. மாவட்டம் வாரியாக 3 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் ஒருவரை தலைவராக தேசிய தலைமை அறிவிக்கவுள்ளது.
தமிழகத்தில் பாஜக மாவட்ட தலைவர் தேர்தல் தொடங்கியுள்ளது. பூத் (கிளை), மண்டல் (ஒன்றிய) நிர்வாகிகள் தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மாவட்டத் தலைவர் தேர்தல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பாஜகவில் 66 அமைப்பு மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத் தலைவர் தேர்தலுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக இன்று தொடங்கி ஜன. 7 வரை நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மாநில நிர்வாகிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.