தமிழகம் முழுவதும் களைகட்டியது தீபாவளி: லட்சக்கணக்கானோர் உற்சாகத்துடன் சொந்த ஊர் பயணம்

3 months ago 14

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். அரசு பேருந்துகள், ரயில்களில் நேற்றும் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் இனிப்புகள், பட்டாசு, ஜவுளி விற்பனை அமோகமாக நடைபெற்றது.

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் உற்சாகத்துடன் நேற்று தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. பிற்பகலில் சிறிது நேரம் மழைகுறுக்கிட்டாலும், மழை விட்டதும் மீண்டும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Read Entire Article