விழுப்புரம்: தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் இருக்கும். மூன்றாவது மொழி தேவையில்லை என மாநில வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள டாக்டர் எம்ஜிஆர் மகளிர் கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம், மும்மொழிக் கொள்கையை ஏற்காதவர்களுக்கு நிதி வழங்க மாட்டோம் என மத்திய கல்வி அமைச்சர் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.