தமிழகத்துக்கான கல்வி பங்களிப்பு தொகை ரூ.2,152 கோடியை விடுவிக்க ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

5 hours ago 1

சென்னை: மாணவர்களின் நலன் கருதி தமிழகத்துக்கான கல்வி பங்களிப்புத்தொகை ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம் அகில இந்திய தலைவர் கே.சி.ஹரி கிருஷ்ணன் தலைமையில் டெல்லியில் ஜூன் 25, 26-ம் தேதிகளில் (புதன், வியாழன்) நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளம் ஆந்திரம், தெலங்கானா, அரியானா ஒடிஷா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 26 அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர்.

Read Entire Article