“தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” - சீமான் சீற்றம்

4 hours ago 2

சேலம்: “கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தால் 90 நாளில் ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் சாராயம் விற்பனை செய்கிறார்கள். இது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது” என நாம் தமிழ் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தால் 90 நாளில் ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் சாராயம் விற்பனை செய்கிறார்கள். இது என்ன ஆட்சி, இது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது. முதலில் ஒரு முறை சாராயம் காய்ச்சி பல உயிர் போனதும் ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுத்தார்கள். மீண்டும் அதே வேலையை, அதே நபர் செய்திருக்கிறார். எந்த துணிவில் அவர் இப்படி செய்கிறார். தினமும் பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் நடக்கிறது. எத்தனை படுகொலைகள் சாலையில் நடக்கிறது, சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. ஆனால், எங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது.

Read Entire Article