தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் மழை: 90 அணைகளில் நீர் இருப்பு 73 சதவீதமாக அதிகரிப்பு

7 months ago 22

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் நேற்றைய நிலவரப்படி அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு 72.85 சதவீதமாக உள்ளது. மேலும், 1,810 ஏரிகள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகள், அணைகள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

Read Entire Article